Posted on May 19, 2012 by Admin3
மும்பை:இயேசுவின் பெயரால் கற்பனையில் உருவான வடிவத்தை சிலையாக வடித்து அவரது போதனைக்கு முற்றிலும் மாற்றமாக வணங்கி வருகின்றார்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இந்தியாவின் மும்பை நகரத்தில் உள்ள வேளாங்கண்ணி சர்ச்சில் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நிறுவப்பட்டுள்ள சிலையின் கால்களில் இருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்ததாம். இதனைக்கண்ட அந்நகரின் கிறிஸ்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். இந்த நிகழ்வானது நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிலையின் பாதத்தை நோக்கி தினசரி குவியவைத்தது. இந்த தண்ணீருக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த தண்ணீரை சேகரித்துக் [...]
Continue Reading
Posted on May 18, 2012 by admin
வீ .களத்தூர் வண்ணாரம்பூண்டி ADM திருமண மண்டபத்தில் 17/05/2012 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது . RAHMANIYAH CHARITABLE TRUST மற்றும் THAI FOUNDATION முலமாக இந்த மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது .இந்த நிகழ்ச்சிக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .மேலும் நிகழ்சிக்கு பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது … [...]
Continue Reading
Posted on May 18, 2012 by Admin3
சென்னை:ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது. தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி. ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு [...]
Continue Reading
Posted on May 16, 2012 by Admin3
இப்னு பஷீர் சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்து செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு பிறகு செய்யாமலே போன பல [...]
Continue Reading
Posted on May 15, 2012 by Admin3
தமிழ்நாட்டில் உள்ள பிரபல தமிழ் சேனல்கள் மலேசியாவில் ஒளிபரப்பாகின்றன. இவை பெரும்பாலும் சீரியல்களையும், சில தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளையும் ஒளிபரப்புகின்றன. இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நெடுந்தொடர்கள் மலேசியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினரை பெரிதும் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலேசியாவில் 28 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களின் பெரும்பாலோனோர் இந்த டிவி சீரியல்களை பார்க்கின்றனர். இந்த டிவி சீரியல்களில் அழுகையும், வன்முறையுமே அதிகம் காணப்படுகிறது என்று மலேசியாவின் பினாங்கு பகுதி நுகர்வோர் அமைப்பினர் புகார் [...]
Continue Reading
Posted on May 14, 2012 by Admin3
உதைப்பது பந்தையா..? அல்லது முஸ்லிம் குடிகாரர்களின் நெஞ்சையா…? இந்தியாவில் கிரிக்கெட் மோகம் பிடித்தாட்ட IPL கிரிக்கெட் ஜுரம் பலரையும்பாதித்திருக்கிறது என்றால் இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில்கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது. ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த யாயா டோரே (YAYA TOURE) என்னும் வீரர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கியப்போட்டியிலும் மான்செஸ்டர் [...]
Continue Reading
Posted on May 14, 2012 by Admin3
தலித் முஸ்லிம்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை தடைச்செய்யும் அரசியல் சட்டத்தின் 341-ஆம் பிரிவை திருத்த போராட்டத்தை துவங்கப் போவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவரக் கோரியும், ஊழலுக்கு எதிராகவும் ஜூன் 3-ஆம் தேதியும், ஆகஸ்ட் மாதமும் போராட்டம் நடத்தப்படும் என்று ராம்தேவ் கூறினார். அகில இந்திய முஸ்லிம் மோர்ச்சா நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். சாதாரண மக்களை கவனிக்காத, நாட்டின் வளத்தை கொள்ளையடிப்பதற்கு எதிராக அனைத்து அரசியல் [...]
Continue Reading
Posted on May 13, 2012 by admin1
வி.களத்தூரில் 17-05-2012 ல் ஹீலர் பாஸ்கர் கலந்துகொள்கிறார். பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் ‘செவிவழித் தொடு சிகிச்சை’ ஹீலர் பாஸ்கர் 17-05-2012 வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நிகழ்ச்சி நடத்துகிறார். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி அமைப்பாளர் மஹஸர் அலி தெரிவிக்கிறார். ஹீலர் பாஸ்கர் அவர்களின் சிகிச்சை முறை பற்றி தெரிந்தவர்கள் தங்கள் குடும்பத்தினர்களுக்கு தெரியப்படுத்தி தன் குடும்பத்தினர்களை இந்நிகழச்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளவும். பெ ங்களுரூ, பெண்ணாடம், அரியலூர், லெப்பைக்குடிக்காடு [...]
Continue Reading
Posted on May 10, 2012 by Admin3
வரலாற்றில் முதன்முறையாக உலகில் முதலாவது நீருக்கடியில் பள்ளிவாசல் சவூதிஅரேபியாவின் தனியார் சுழியோடிகள் குழுவொன்றினால் அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது நிரூக்கடியில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு முடிந்ததுடன், அதில் தாம் தொழுகையை நிறைவேற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜோர்தான் எல்லைப்பகுதிக்கு அண்மையாக தபூக் நகரின் வடமேற்கு கடற்பரப்பில் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.மணல் நிரப்பப்பட்ட பெரிய பிளாஸ்திக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு சுழியோடிகளால் இவ் அடையாளப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதாக அரேபிய நாளிதழ் ஒன்று தெரிவிக்கின்றது. நீருக்கடியில் பள்ளிவாசலின் நிர்மாணப் பணியின் போது, இறுதிப் பகுதிகளை இணைக்கும் போது [...]
Continue Reading
Posted on May 3, 2012 by Admin3
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) – (இறைவனின்சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!). சகோதரர் ஜாகிர் சென்ற அத்தியாயத்தில் வரதட்சணை எல்லாம் குறைந்து விட்டது என்று கருத்து பதிந்திருந்தார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் வீட்டிலிருந்து பால் குடம், பனியாரம், காலை பசியாற, அல்வா, பிரியாணி,தோழன் சாப்பாடு இப்படி ஏகப்பட்ட ஐயிட்டங்களை வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது இன்னும் குறையவில்லை. பெண் வீட்டிலிருந்து வீடாக, மனையாக வாங்குவதும் குறையவில்லை. (வரதட்சணையை வெளியில் தெரியாமலும், ரகசியமாகவும் வாங்கிக் கொள்வதாக கேள்விப்பட்டேன்). சர்க்கரை நோய் உள்ளவர்களும் பெண் வீட்டில் சீனியில் செய்த பலகாரங்கள் கேட்கிறார்கள். இவர்கள் வாங்கி சாப்பிடுவதற்கா? நாங்களும் [...]
Continue Reading
Posted on May 2, 2012 by Admin3
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி பெரம்பலூர் மாவட்டம் ,வி,களத்தூர் கிளை சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி 02.05.2012 அன்று காலை 10 மணியளவில் கிளை தலைவர் A .சித்திக் பாஷா தலைமையில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் A . முஹம்மது சித்திக் ,கிளை துணை தலைவர் M .கலிலூர் ரஹ்மான் ,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக செயலாளர் A [...]
Continue Reading
Posted on May 2, 2012 by Admin3
01.05.2012 அன்று வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது . தலைவர் ,துணை தலைவர் துவக்கிவைத்தனர் .பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் . புகைப்படம் ;நமது செய்தியாளர் star studio ஹசன் முஹம்மது
Continue Reading
Posted on May 1, 2012 by Admin3
கடந்த 29.04.2012 அன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவி நூருல்ஹுதா இஸ்மாயில் துவக்கிவைத்தார் . புகைப்படம் ;நமது செய்தியாளர் star studio ஹசன் முஹம்மது
Continue Reading
Posted on April 25, 2012 by admin
சாதி வாரியாக கணக்கெடுப்பு: முஸ்லிம்கள் `இஸ்லாம்’ என்று குறிப்பிட வேண்டும்: முஸ்லிம் லீக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை 24 கேள்விகளுக்கான பதில்கள் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் இன்று தொடங்கியது முஸ்லிம் ஜமாஅத்துக்கள் விழிப்புடன் செயலாற்றுமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ கத்தில் இன்று தொடங்கியுள்ளது. 24 கேள்விகள், கேட்கப்பட்டு அவற்றிற்கான பதில்கள் உடனுக் குடன் கனிணியில் பதிவு [...]
Continue Reading
Posted on April 25, 2012 by Admin3
சிட்னி : நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று மிரட்டுகிறது ஒரு ஆய்வு முடிவு. ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் [...]
Continue Reading
Posted on April 24, 2012 by Admin3
கொழும்பு:இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும் முயற்சியை நிறுத்தாவிட்டால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் என்று நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை தம்புள்ளையில் உள்ள மஸ்ஜித் மீது வெடிக்குண்டு [...]
Continue Reading
Posted on April 24, 2012 by Admin3
லக்னோ:முஸ்லிம்களின் ஷரஅத் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.மும்பையில் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உரை நிகழ்த்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை குறித்து கருத்துக்களை வெளியிட்டனர். மத நிறுவனங்களை வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்து நேரடி வரிவிதிப்பு சட்டமசோதாவில் திருத்தங்களை கொண்டுவர வாரியம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்பில் இருந்து மதரசாக்களுக்கும்(முஸ்லிம் கல்வி [...]
Continue Reading
Posted on April 22, 2012 by admin
பாகிஸ்தானின் கராச்சியில் 6 கால்களுடன் பிறந்த குழந்தையின் 4 கால்களை மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அகற்றியுள்ளனர். குழந்தை தற்பொழுது அவசர சிகிட்சைப் பிரிவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எட்டுமணி நேரம் நீண்ட ஆபரேசன் மூலம் கராச்சி நேசனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் சைல்ட் ஹெல்தின் ஐந்து மருத்துவர்களின் குழு இந்த அறுவைச் சிகிட்சையை மேற்கொண்டனர். அறுவைச் சிகிட்சை முழு வெற்றி என்று மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.ஜமால் ராஸா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஆறு கால்களுடன் மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்தது. 10 லட்சம் [...]
Continue Reading